"கோவில் நிலத்தை மீட்க ஒருங்கிணைந்து செயல்ட வேண்டும்" அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

0 2512

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் நிலத்தை மீட்கக் கோரி, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

கோதண்டராமர் கோவில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை, 6 வாரங்களில் கூட்ட வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் நிலங்களை மீட்பதற்கான சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்துவைத்தார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments